Tuesday, November 8, 2011

கனவு மெய்பட வேண்டும்!!!


கனவு மெய்பட வேண்டும்!!!
யான் கொண்ட காதலும் மெய்பட வேண்டும்….
காதல் என்ற கனவும்,
கனவு என்ற காதலும் மெய்பட வேண்டும்…

எறும்பால் இமயத்தில் ஏறிட முடியாது…
எனினும் முயற்சி செய்வதன்றோ…
அதே போல் தான்…


Thursday, November 3, 2011

ஆச்சர்யம்

அந்த ஆண்டவனும் ஆச்சர்யபட்டிருப்பான்
உன்னை படைத்த பிறகு!!!!
ஒரு வேளை தானும் மனிதனாக
பிறந்திருக்கலாமோ என்று!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, March 14, 2011

என்ன தான் வேண்டும் உனக்கு???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காற்றில் நடக்கையில் தூசி விழுந்தாலும்
கண் சிமிட்டாத நான்,
உன்னை பார்த்த நொடியிலிருந்து என் ஒற்றை
கண் மட்டும் துடிக்கலாயின !!!

உன் சுவாசக் காற்றினையே நான்
சுவாசிக்கலானேன்!!!

உன் பெயரையே உச்சரிக்கலானேன்!!!
உன்னை வர்ணிப்பதே தொழிலாய்க் கொண்டேன்!!!

பசி, தூக்கம், சுற்றம், நட்பு, உறவு மறந்து
உன்னையே எண்ணலானேன்!!!

இப்படி என் இதயத்தை கொள்ளை கொண்டு விட்டாய்!!!
இன்னும் என்னிடத்தில் என்ன இருக்கிறது!!!

ஏன் என்னை இன்னும் தொடர்கிறாய்???
விட்டு விடு, இனியாவது நான்
வாழத் தொடங்குகிறேன்!!!

இன்னும் என்ன வேண்டும் உனக்கு???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, March 6, 2011

என்னை பிரிதல் உனக்கு மகிழ்வா??


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன்
என்று மேலும் கூறி உன்னை மீண்டும்
என்னை காதலிக்க வைக்க விரும்பவில்லை....

என்று நீ நானில்லாத வாழ்க்கை
மகிழ்வினை தரும் என்று எண்ணினாயோ
அன்றே நீ என்னை விட்டு விலகி சென்றுவிட்டாய்.....

என்னுடனான உன் பிரிவு மகிழ்வினை
தரும் என்று நீ எண்ணினால்
அவ்வாறே இருந்து விடு...

உன் மகிழ்வே எனக்கும் சிறு மகிழ்வினை
தருமென்று நீயும் எண்ணிக்கொள்.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிம்மதியாய் இரு நீ மட்டும்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சூரியனும் உருகிவிடும் படியான ஒத்த
குளிரினை கொண்ட மார்கழி மாத
கார்விருளில் என்னறயினுள் ஏதோ ஒரு மூலையில்
உறங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி

என் தூக்கம் கலைத்து சென்றாய் உன் காதலை கூறி....

காக்கைகளும் ஏனைய பறவைகளும்
தன் இனத்துடன் மீண்டும் இணைகிற
அந்த மந்தமான ஒரு மாலை பொழுதினில்,

மீண்டும் என் தூக்கம் கலைத்து சென்றாய் உன் பிரிவை கூறி.....

இரண்டுகுமானதாய் ஒரு வேறுபாட்டினையும் கூறிகிறேன்
கேளடி என் காதலியே!!!

மேற் கூறிய இரு வேளைக்கு பிறகு
நிம்மதி கெட்டது என்னவோ எனக்கு மிகவும் அதிகம்....

என் சீண்டல்கள் இல்லமால் நிம்மதியாய்
இருப்பது என்னவோ உனக்கு பிடித்திருகிறது போலும்!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Saturday, March 5, 2011

காதல் => நட்பு


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காதலை காட்டிலும் நட்பு தான்
சிறந்தது....
இது என் முடிந்து போன காதல்
மெய்ப்பித்தது....
ஏனெனில் அவள் என்னுடனான காதலை தான்
முரித்துகொண்டாள்...
என்னுடனான நட்ப்பை அல்ல...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முடியவில்லை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை மறந்து விடு என்று நகையாடி விட்டு  சென்றுவிட்டால்
என் இதய தேவதை...
அன்று முதல்
அவளை பார்க்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்
கண்கள் மறுக்கின்றன.....
அவள் மனம் நுகர வேண்டாம் என்று எண்ணுகிறேன்
என் சிறு மூக்கும் மறுக்கின்றன.....
அவள் பற்றி பேச வேண்டாம் என்று எண்ணுகிறேன்
என் இதழும் மறுக்கின்றன.....
அவளை நினைக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்
மனமும் மறுக்கின்றன.....
அவள் கொடுத்த பரிசுகளையும் அவளின் புகைப்படங்களையும்
தீண்ட வேண்டாம் என்று எண்ணுகிறேன்
கரட்டு கைகளும் மறுக்கின்றன.....
இவை எதுவும் என்னால் இயலாததால்
மதுக்கடையை நோக்கி செல்கிறேன்....
ஆனால் கால்களும் பயணிக்க மறுக்கின்றன.....
என்னையே அழிக்க எண்ணி ஒரு முழம்
கயிற்றினை தேடி எடுத்து விட்டேன்.....
இதுவரையில் எனக்கு உதவாத மேல் சொன்ன என் உறுப்புகள்,
இப்பொழுது மட்டும் பேருதவி செய்கின்றது......
என்னதொரு விந்தை...!!!!!
அவளுக்கு பிடிக்காதது போல், என்னை என் உடலுக்கும்
புடிக்கவில்லையோ ???!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அதிகரித்த நினைவுகள்..


தன்னை மறந்து விடும்படி
என்னிடம் சொல்லி சென்றாள் என் காதலி...
இப்பொழுது தான் நான் அவளை
அதிகமாய் நினைக்கிறன் ........

ஒரு வேளை என்னிடம் சொல்லாமலே
இருந்திருக்கலாம்....... தன்னுடைய காதலை....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, January 7, 2011

காலங்கள் கறை படிகின்றன.....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதற்காகவோ ஒரு முடிவுடன் தொடங்கிய
செயல்கள், பல முறை வேறு பாதையில் சென்று
புதிதாய் ஒரு யுகத்தினை கொடுத்து
விட்டு செல்கின்றன....

இருபினும் சிறியதோர் சந்தோசம் அந்த
புதிய வரவுகளில்.....
இருபினும் மீண்டும் சிலிர்க்க தொடங்கும்
பழைய நினைவுகள்...

கால் தன் பயணத்தினை மறுபடியும் துவக்கும்
பழைய நினைவுகளை தேடி....
மனமோ புதியதாய் கிடைத்ததையும் மறந்து
மீண்டும் ஒரு புதிய பொருளை தேட தொடங்கும்.....

இங்கும் செல்லமால் அங்கும் செல்லாமல்
உடல் பிண்டம் போன்று ஓரிடத்தில்
தன்னிலை மறந்து தவித்து கொண்டிருக்கும்.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா........
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, September 27, 2010

அமிர்தம்

அமிர்தத்தின் சுவையை உணர்கிறேன்....

உன் இதழ் தரும் முத்தங்கள்

ஒவ்வொன்றிலும்....

--ரவிஷ்னா

Sunday, September 26, 2010

மரணம் நிச்சயிக்கப்படும்


என்னுடைய மரணம் கண்டிப்பாய் நிச்சயிக்கப்படும்
நீ என்னுடன் இல்லாத ஒவ்வொரு ஷணமும்.....
அவை திருமணம் செய்வதற்கு முன்பாக
வந்துவிடு என் பெண்ணே......

--ரவிஷ்ணா

Wednesday, August 12, 2009

விலகி நிற்கிறேன் சில காலங்களுக்கு


நண்பர்களுக்கு வணக்கம்,
நான் சில மதங்களாகவே கவிதைகள் எழுதுவதில்லை. எனக்குள் எழுந்த சில மாற்றங்கள் என்னை மகிழ்ச்சியடையவும், வேதனையடையவும் வைத்து விட்டது. அதற்கு என் கவிதைகளும் ஒரு வகையில் காரணமே. அதனால் நான் மிகவும் நேசிக்கும் ஒரு தோழமையின் அறிவுரையின் படியும், கட்டளையின் படியும், நான் கவிதை எழுதுவதை சில மாதங்கள் அல்லது வருடங்கள் நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். நான் இதை முன்னதாகவே சொல்லியிருக்க வேண்டும். ஏனென்றால் கடைசி பதிவிலிருந்து இது வரை ஆறு மாதங்கள் பக்கம் ஆகிவிட்டன.



நன்றிகளுடனும் வேதனையுடனும்,


ரவிஷ்னா


Thursday, February 5, 2009

அழுகையின் ரத்தம்


எனக்கு ஏற்பட்ட சோகங்களை
நினைத்து பார்கையில் அழுகை
பீறிட்டு வருகிறது
ஏனோ தெரியவில்லை அழுகையை
என்னுள்ளே அடக்கிக் கொண்டேன்
அதனால் அடங்கிப் போன கண்ணீரெல்லாம்
உயிர் பெற்று உடலினுள்
ஓடத் துவங்கியது ரத்தத்திற்கு பதிலாக..........
**************************************************
ரவிஷ்னா
**************************************************

Wednesday, February 4, 2009

பட்டும் மலரும் ரோஜா


என் தோட்டத்தில் பூத்த பல
ரோஜாக்களில் ஒன்றை மட்டும் பறித்து
என்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினேன்......
நான் பறித்ததாலோ என்னவோ
அது பறித்த உடனேயே காய்ந்து விட்டது.......
இருப்பினும் இன்னும் என்னுள்
அந்த ரோஜாவின் மணம் வீசிக்
கொண்டு தான் இருக்கிறது.......
மறுபடியும் அந்த ரோஜா(அதே ரோஜா) என்
தோட்டத்தில் மலர்ந்து விடும்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.........
***************************************
ரவிஷ்னா
***************************************

Sunday, January 4, 2009

கொலையாய் ஆன ஒரு மரண தண்டனை


நீ என்னை மறந்த பின்னும்
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்
என்னை பற்றியவை...

உன்னைத் தொட்டு ஓடி
விளையாடிய என் கைகளை காணும் போது
கோவத்தால் துண்டு துண்டாய்
வெட்டி விட்டேன்
இரு கைகளையும்
நீ என்னை மறந்த பின்னும் ..............

உன் உருவத்தை மீண்டும் மீண்டும்
என் கண் முன்னால் கொண்டு வரும்
என் கண்களை
கூறிய ஆயுதத்தை கொண்டு பிடுங்கி விட்டேன்....
நீ என்னை மறந்த பின்னும் .......

உன் வாசத்தையும் சுவாசத்தையும்
தருகின்ற என் சுவாசக் குழாயினை
கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்....
நீ என்னை மறந்த பின்னும் ........

உன் வாசத்தையும் சுவாசத்தையும்
தருகின்ற என் சுவாசக் குழாயினை
கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்
நீ என்னை மறந்த பின்னும் ........
உன் பெயரை உச்சரிக்கின்ற
என் நாவினையும் வெட்டி விட்டேன்...
நீ என்னை மறந்த பின்னும் ........

உனக்கென்று ஒரு இடம் இருந்த
என் இதயத்தையும் விடவில்லை....
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை
கையிலெடுத்து கழுத்தினை நெரித்து
கொன்று விட்டேன்.....
நீ என்னை மறந்த பின்னும் ......

மெல்ல தரையில் சாய்கிறேன்.....
உடல் துடித்துக் கொண்டிருக்கிறது......
சற்றே நினைவில் வருகிறாய்.....
மூளையை மட்டும் விட்டு விட்டாய்
என்று அற்புதமாய் சொல்லி நகையாடுகிறாய்......

மகிழ்ச்சியுடன் இறக்கிறேன்....
இல்லை என்னை கொன்று விட்டேன்
மகிழ்ச்சியுடன்
--ரவிஷ்னா

Wednesday, December 17, 2008

சின்ன சின்னதாய்.....

உன்னைக் கண்டு முதன்
முதலாய் வெட்க்க பட்ட என்னைப் போன்று
கடலலையும் உன் பாதம் தொட்டு
மீண்டும் ஓடிச் செல்கின்றது
பாரடி....

நான் உன்னைக் கண்டு
ஒரு யுகம் முடிந்து விட்டது பெண்ணே...
என்ன பார்க்கிறாய்....
ஒரு நிமிடம் ஆனதை தான்
கூறினேன்.....

பூச்செடிகளின் அருகிலேல்லாம் செல்லாதே!!!
காற்றில் பூக்கள் உதிர்ந்து உன்
பாதத்தை புண்ணாக்கி விட
போகின்றன.....

என் இதயத்திற்கு பேசத் தெரியாது...
ஒரு வேலைத் தெரிந்திருந்தால்
துடிப்பதற்கு பதிலாக உன்
பெயரையே உரைத்துக் கொண்டிருக்கும்.....
ஆதவனக்கு ஆணை இட்டுள்ளேன்....
நீ வெளியே வரும் நேரத்தில்
கண்டிப்பாக அஸ்தமனம் ஆகிவிட
வேண்டுமென்று
--ரவிஷ்னா

Sunday, November 16, 2008

உன் குழந்தையாய் நான்....


உன் தலையில் சூடும் பூவாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் மறுநாள் காலையில்
வீசி எறிந்து விடுவாய் ...
வேண்டாம் அப்பிறப்பு....

உன் நெற்றியில் இடும் திலகமாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் மறுநாள் குளியலின் போது
எடுத்து விடுவாயே !!!
வேண்டாம் அப்பிறப்பு....

உன் கண்களில் இடும் கரு மையாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் அதுவும் ஒரு நேரத்தில்
கரைந்து போகக் கூடும் ....
வேண்டாம் அப்பிறப்பு....

உன் உடலோடு ஒட்டிக் கொள்ளும்
உடையாய் நான் இருப்பேன்...ஆனால்
மறுநாள், நீ அழுக்கென்று ஒதுக்கி விடுவாய்...
வேண்டாம் அப்பிறப்பு....
உன் கணவனாய் நான்
இருக்க விரும்புகிறேன். ஆனால்
நமக்கென்று ஒரு குழந்தை பிறந்தால்
நீ என்னை கவனிக்க மாட்டாய்.
வேண்டாம் அந்த பிறப்பும்......
உன் கால்களை கட்டிக் கொள்ளும்
உன் குழந்தையாய் இருந்திட விரும்புகிறேன்...
அப்பொழுது தான் நான் சினுங்கிடும் போதும்,
சிரித்திடும் போதும் முத்தங்கள் தந்து
என்னைக் கொஞ்சிடுவாய்....
அதுவே வேண்டும் எனக்கு.......
--ரவிஷ்னா


Monday, October 20, 2008

சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்


என் தேவதையே!!!
உன்னிடம் சில சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்....
உன் அனுமதியோடு....
இறைவன்
உன் கூந்தல் கண்டு தான் மேகம் என்னும்
இருட்டினை படைத்தானோ??
உன் நுதல் கண்டு தான் தாமரையை செய்தனோ??
உன் கண்கள் கண்டு தான் மீன்களை படைத்தானோ??
உன் கன்னங்கள் கண்டு தான் மது கிண்ணங்கள் தந்தானோ??
உன் இரு இதழ் கண்டு தான் ரோஜா மலர் தந்தானோ??
உன் எச்சில் கொண்டு தான் அமிழ்தம் செய்தானோ
உன் உடல் கண்டு தான் தேவதை என்னும்
பெண்களை படைத்தானோ??
உன் நகங்கள் கண்டு தான் பிறையினை படைத்தானோ??
தெரியவில்லை எனக்கு...
ஆனால் உன்னை கண்டும்,உன்னைக் கொண்டும்
தான் நான் கவிதையினை படைக்கிறேன்...
--ரவிஷ்னா

Sunday, October 19, 2008

கண்ணீர் வியர்வை


நீ என் உடன் இருக்கும் போது
உனக்கு நான் முத்த மழை பொழிவதனால்
என் உதடுகள் வேர்க்கின்றன.....
நீ என்னை விட்டு பிரியும் போது
உன் பிரிவு தாங்காமல்
என் கண்களும் வேர்க்கின்றன
கண்ணீராய் ....
--ரவிஷ்னா

காதலிப்பேன்...காதலிப்பேன்...


தேவதையே உன்னை நான் காதலிப்பேன்...
என்றென்றும் நான் காதலிப்பேன்...
நீ எங்கு சென்றாலும் நான் காதலிப்பேன்...
நீ என்னை காதலித்தாலும் நான் காதலிப்பேன்...
நீ என்னை காதலிக்காவிட்டாலும் நான் காதலிப்பேன்...
நீ என்னை மறந்தாலும் நான் காதலிப்பேன்...
நீ வேறு ஒருவனை மணந்தாலும் நான் காதலிப்பேன்...
நான் இறந்தாலும் உன்னை காதலிப்பேன்...
மீண்டும் பிறந்து வந்தால்
உன்னையே நான் காதலிப்பேன்...
உன்னை காதலிக்கும் வரம் ஒன்று
மட்டும் எனக்கு போதும்....
நான் உன்னை காதலிப்பேன்...காதலிப்பேன்...
என்றென்றும் காதலிப்பேன்...
--ரவிஷ்னா

Tuesday, October 14, 2008

பூவின் தவம்


பூக்களெல்லாம் ஒரு நாள் தவம் செய்தன.....
தான் எப்பவும் வாடாத பூவாய்
உன் கூந்தலில் இருக்க வேண்டும்
என்கிற வரம் வேண்டி....
பூவிற்கும் பிரிய மனம் இல்லை
உன்னை விட்டு....
--ரவிஷ்னா

Sunday, October 12, 2008

மௌனிக்கும் புயல்


உன் மௌனம் என்னும் புயலால்
என்னைக் கொல்லாதே
போதும் உந்தன் இன்ப வேதனை.....
உன் பூவென்னும் இதழ் விரித்து
அமிழ்தென்னும் வார்த்தைகளை சிந்திவிடு....
அள்ள காத்திருக்கிறேன்
உன் வார்த்தைகளையும் உன்னையும்....
--ரவிஷ்னா

Wednesday, October 8, 2008

நூலகம்

நீ ஒரு நூலகம்...
உன் அழகு ஒரு புத்தகம்...
இந்த நூலகத்தில் பல்லாயிரக் கணக்கான
புத்தகங்களை காண்கிறேன்....
இருப்பினும் ஒரு சிறிய ஆசை....
எல்லா நூலினையும் நான்
மட்டுமே படிக்க வேண்டும்...
--ரவிஷ்னா

Backup

நீ தலைகோதி முடித்தவுடன்
சுருட்டி எறிந்த முடி,
விரல்களைத் தாண்டி வளர்ந்ததால்
வெட்டப்பட்ட நகத்துண்டு ,
மாலையில் வீசி எறியும்
காய்ந்த பூக்கள்
இவையெல்லாம் மீண்டும் வேண்டும்
என்றால் எங்கும் தேடாதே !!!
என்னிடத்தில் வா...
Backup பத்திரமாக இருக்கிறது

Monday, September 15, 2008

சிதறிய சாரல்கள்-1

*ஒரு நாளைக்கு எத்தனை முகங்களை
பார்த்தாலும் மீண்டும் மீண்டும்
பார்க்கத் தூண்டும் ஒரு வட்ட நிலா
உன் முகம்...

*ஒரு பார்வையாலேயே என்னை
ஊமை ஆக்கி விடுகின்ற காந்த கண்கள் ...

*நீ என் உடன் இருப்பாய் என்றால்
நரகத்திலும் நான் வசிக்கத் தயார்.

*நான் என்னையே தொலைத்து விட்டேன்...
தொலைத்த இடம் தெரிந்தும் தேட மறுக்கிறது மனம் .
இருப்பது உன்னிடம் தானே
பத்திரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை போலும்...
--ரவிஷ்னா

Sunday, September 7, 2008

நீ வேணும் டா என் செல்லமே

நீ வேண்டும் நீ வேண்டும்
என்றென்றும் நீ வேண்டும்....

நான் அழுகின்ற போது
விழியோரம் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட நீ வேண்டும் ....

நான் சோகமாய் இருக்கின்ற போது
நகைச்சுவை கூறி சிரிக்க வைக்க
நீ வேண்டும் நீ வேண்டும் ....

நான் நடந்திடும் போது என்
விரல் பிடித்து நடந்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....

நான் மகிழ்ச்சியாய் இருக்கின்ற
தருணங்களில் அதை பகிர்ந்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....

நான் மழையில் நனைந்தால்
செல்லமாக திட்டி, தலைத் துவட்டிட
நீ வேண்டும் நீ வேண்டும் ....

நான் பேருந்தில் பயணிக்கின்ற போது
உடன் அமர்ந்து பயணிக்க
நீ வேண்டும் நீ வேண்டும்.....

நான் இரவு நீண்ட நேரம்
விழித்திடும் போது , கையில் காபியுடன்
"இதை குடி டா " என்று கூறிட
நீ வேண்டும் நீ வேண்டும் ....

நான் உறங்குகையில் என்
தலை கோதி "என் செல்லம்"
என்று ஒரு முத்தம் தர
நீ வேண்டும் நீ வேண்டும் ....

செல்லமாய் ஒரு பெயர்
வைத்து என்னை அழைத்திட
நீ வேண்டும் நீ வேண்டும் ....

சில நேரங்களில் என் தாயாய்
சில நேரங்களில் என் தோழியாய்
சில நேரங்களில் என் மனைவியாய்
சில நேரங்களில் என் குழந்தையாய்
இருந்திட
நீ வேண்டும் நீ வேண்டும்
என் செல்லமே ....
--ரவிஷ்னா

Sunday, August 10, 2008

அந்த நாட்கள்

ஏதோ ஒரு காரணத்தால்
அலுவலகப் பேருந்தை தவறவிட்ட
நான் நகரப் பேருந்தில் பயணிக்கலானேன்......

அன்று தான் அவளைக் கண்டேன்.....
இல்லைக் காணக் கிடைத்தேன்....
முடிவு செய்தேன் என் முதலும்
முடிவும் அவள் தான் என்பதை.....

பின் பேருந்தை தவற விடுவதே
என் வாடிக்கை ஆகிப் போனது...

பேருந்தில் ஏறியவுடன் என்
இருக்கண்களும் மழையைத் தேடுகின்ற
பயிரைப் போல் அவளையே தேடலாயின....

அவள்-ஒரு தேவதை....
இதைத் தவிர வேறதையும்
அறியேன் அவளைப் பற்றி ....

என் மனதில் காதல் பயிர்
முளைத்து நன்கு வளர ஆரம்பித்தது....
உரம் தண்ணீர் எதுவுமின்றி .....

சிறிய புன்னைகையில் ஆரம்பித்து
எப்படியோ என் ஊமைக்காதலுக்கு
பேசும் வரம் கிடைத்து
பேசத் தொடங்கியது அவளிடம்....

எப்படியாவது கூறிவிட வேண்டும்...
எந்திர உறுதியோடு வருவேன்....
அவளைப் பார்த்த பின் புறமுதுகு
காட்டி ஓடும் கோழையாகி விடுவேன் .....

ஒரு நாள் மனம்,தைரியம் போன்ற
என் நண்பர்கள் உடன் வர ,
காதல் என்னும் தாம்பூலத் தட்டினை
ஒற்றை காகிதத்தில் அவளிடம் சமர்ப்பித்தேன் .....

சம்மதத்தை உடனே தெரிவித்திருக்கலாம்.....
இல்லை....சற்றே நீண்டது கடவுளடனான
என் வேண்டுதல் பாவம் .....
படாதபாடு பட்டு விட்டார் என்னாலும்,
என் காதலாலும் சில நாட்கள்.....

அன்று முதல் ஒவ்வொரு
நாள் அவளைக் காணும் போதும் ,
ஆசிரியரைக் கண்டு அஞ்சுகின்ற
மாணவனைப் போல் அஞ்சலானேன்...

அருகருகில் அமர்ந்தும் அமைதிப்
படையே நீடித்தது ....
யார் முதலில் பேச என்பதற்கான
போராட்டம் ஒரு உலகப் போராகவே
நடந்தது எங்களுக்குள் ....

ஒரு முறை என் தாம்பூலத்தட்டு
மீண்டும் ஒரு காகிதத்தில் என்னிடமே
வந்தது...அவளிடமிருந்து.....

ஆனால் இம்முறை அவள் கூட
வந்த தோழிகள்
புன்னகையும் வெட்கமும் மட்டுமே!!!!

'மாலை ஆறரை மணிக்கு
கடற்கரையில் கூடுவோம் ' என்னும்
வார்த்தைகள் அச்சுக்களாய்
பொறிக்கப் பட்டிருந்தன
என் தாம்பூலத் தட்டினில்....

அப்பொழுது முதல் ஒவ்வொரு
நிமிடத்தையும் நகர்த்த
போராட்டம் தான் என்னுள்....

நேரமும் வந்தது...
பேருந்தும் வந்தது...
மழையும் வந்தது....
நானும் வந்தேன்....

ஆனால் அவள் வரவில்லை...
காத்துக் கொண்டிருந்தேன் .....

மழையில் நனைந்த மெல்லிய
மலரனே தத்தி தத்தி வந்தாள்
குழந்தையைப் போன்று ....

பதிலைத் தேடி அவள்
இதழையே வெறித்து பார்த்துக்
கொண்டிருந்த நான்
சற்றும் எதிர் பார்க்கவில்லை....

திடீரென அள்ளி அணைத்து
நெற்றி நுகர்ந்தாள்
' I LOVE YOU ' கூறி

மறக்க முடியவில்லை
அந்த நாட்களை....
--ரவிஷ்னா

Friday, August 8, 2008

என்னுடைய பல வேதனைகளில் சில-3

*வேதனைகள் அதிகரிக்க அதிகரிக்க
மௌனங்கள் கூடுகின்றன.
என்னை பார்த்து என் நிழலும்
கைகொட்டி சிரிக்கின்றது.....
ஆறுதலுக்கு கூட அதுவும் கூட
இருப்பதில்லை....

*மனது வலிக்கின்ற போதெல்லாம்
புல்தரையில் புலம்புகிறேன்
புர்க்களோடு...
அதுவும் என் வேதனையை கேட்டு
அழுது விடுகிறது...
அதன் மேல் கண்ணீரை காண்கிறேன்

*எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்
கொள்ள முயற்சிக்கிறேன்.....
என்னால் முடியவில்லை ....
என் சிறிய மனம்
குழந்தையைப் போன்று திரும்ப திரும்ப
பழயதை நினைவுக்கு கொண்டு
வந்து விடுகின்றது.....

*என் மனதுக்கு நன்றி
சொல்கிறேன்.சில நல்ல உள்ளங்களின்
நல்ல உணர்வுகளை வெளிக்காட்ட
வைத்தமைக்கு...

*என் கண்களில் இருந்து
வழியும் கண்ணீரை துடைக்க
ஒரு நண்பன் கூட இருந்தது
சற்றே ஆறுதலாக இருந்தது.....
இப்பொழுது அதை எண்ணுகையில் ????
உன்னை மீண்டும் பார்த்தால்
என் கண்ணீரை துடைப்பதர்க்காகவே
நான் அலுத்து விடுவேன்.....
--ரவிஷ்னா

Thursday, August 7, 2008

என்னுடைய பல வேதனைகளில் சில-2

*இன்று முதல் நான் தனிமரம்
ஆனேன்....
என் நண்பர்கள் அனைவரும்
பிரிந்து விட்டனர்.
இருப்பவர்கள் என்னை புரிந்து
கொள்ள மறந்து விட்டனர்.

*ஆரம்பத்தில் என்னால் தாங்க
முடியவில்லை....
இப்பொழுது பழக முயற்சிக்கிறேன்...
தனிமையில் இருக்க ....
பழக்கப்பட்டு விடும் என்ற
நம்பிக்கை இருக்கிறது ....

*எல்லா வற்றையும் மறக்க
நினைக்கிறேன்...
மறக்க முடியவில்லை.....
தனிமையின் புலம்பலாய் போகின்றன
என் மௌனங்கள் ....

*கூட்டத்தில் இருக்கும் மரங்களை
விட தனியாய் இருக்கும் மரங்களுக்கே
மௌசு அதிகம்.
மற்றவர்களின் பார்வை அதன் மேல் படும்...
இவ்வாறு பல வசனங்களை கூறி
தேற்றி கொள்கிறேன் என் அடங்கா மனதை.
--ரவிஷ்னா

பின் குறிப்பு:
வழிகள் இருந்தால் கூறவும்.

என்னுடைய பல வேதனைகளில் சில

*நான் அழுகின்ற போதெல்லாம்
யார் யாரோ கேட்கிறார்கள் ,
ஏன் அழுகிறேன் என்று .
அப்பொழுது தான் நான் அதிகமாக அழ
நினைப்பேன் …
ஆனால் காரணம் தெரிந்த நீயும்
இவ்வாறு கேட்கையில் வந்த அழுகையும்
நின்று விடுகிறது .
வற்றி போன உன் இதயத்தை
நான் இனியும் என்னுடன்
வைத்துக் கொள்ள விரும்பவில்லை .....

*மறந்து போன என் இதயம்
உன்னை நினைக்கின்ற போதெல்லாம்
நான் என்னையே அரைந்து கொள்வேன்
இப்பொழுதெல்லாம் நான் என்
கன்னத்தில் அரைவதையே வேலையாககொண்டுள்ளேன்.

*நான் மரணத்தின் விளிம்பில் நிற்கிறேன்...
உன் பதில் எதுவாக இருந்தாலும்
என் மரணம் நிச்சயம்.
சரி என்றால் உனக்கும் இதயம் இருக்கின்றது
என்ற அதிர்ச்சியில் இறப்பேன்.....
இல்லை என்றால் உனக்கு இதயமே இல்லை
என்ற ஆச்சர்யத்தில் இறப்பேன்.....

*ஆவிகள் உள்ளனவா இல்லையா ?
தெரியவில்லை.
ஆனால் காதல் என்னும் இடுகாட்டில்
கல்லறை என்னும் இல்லத்தில்
என்னை போன்ற ஆவிகளும்,
உலாவுகின்றன.
உண்மையில் அது ஒரு தண்டனையை
தனக்குத் தானே கொடுத்துக் கொள்வது....

*நீ உலகத்தின் எந்த தேசத்தில் இருந்தாலும்
எந்த மூலையில் இருந்தாலும்
உன்னைக் கண்டுபிடித்து விடுவேன்....
அதிசயப் பிறவியை அனைவரும் அறிவர் அன்றோ???
கல் என்னும் இதயத்தை
சுமப்பவள் அல்லவா நீ???

*காதலில் தோல்வி கண்டவர்கள்
ஒரு தலைக் காதலில் தோல்வி
அடைந்தவர்களை கண்டு
நிம்மதியடைய வேண்டும்.
சொன்ன காதலில் தோல்வியைக் காட்டிலும்
சொல்லாத காதல் தோல்வி அடைவது
பெரியத் துன்பம்.



Monday, August 4, 2008

நீ நான் காதல்


நீ என்னை மறந்து
நான் உன்னை மறந்து
நாம் உலகத்தினை மறந்து
உயிர் தந்த பெற்றோரை மறந்து
உடனிருக்கும் நட்பினை மறந்து
தொலைபேசியில் மணிகணக்காய்
அரட்டை அடிப்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....
கடற்கரையில் அமர்ந்து
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
கனவு காண்பதில் இல்லை -
உண்மைக் காதல்.....
உல்லாச உணவகங்களில்
ஒரு குவளை தேநீரை
ஒரு மணி நேரம் உறிஞ்சுவதில் இல்லை-
உண்மைக் காதல்.....
உண்மையான காதல் என்னவெனில் ,
உறங்கச் செல்லும் முன் ஒரு நிமிடம்
உன்னை நினைக்கிறேன்-
இது என் உண்மைக் காதல்.....
பேருந்தில் பயணிக்கின்ற போது
சன்னலோர இருக்கையில் அமர்ந்து
சில்லென காற்றின் ஈரப்பதத்தில்
உன்னை நினைக்கிறேன்-
இது என் உண்மைக் காதல்.....
நான் உணவுண்ணும் போது
முதல் வாய் எடுத்து வைக்கையில்,
நீயும் உண்டிருப்பயா???
என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன்....
இது என் உண்மைக் காதல்......
இது வரை உன்னை நான் பார்த்த தில்லை ...
கதைகள் பல பேசியதில்லை.....
இவ்வாறுதான் இருப்பாய் என்று
எனக்குள்ளே உனக்கு ஒரு உருவகம்
கொடுத்து ஒரு உருவமாய் பார்க்கிறேன்.....
வா பெண்ணே காதல் என்னும் கடலில்
ஊடல் என்னும் ஓடத்தில்
உலகினை சுற்றலாம் கனவில்......
நீ ஒரு குழந்தை....
நானும் ஒரு குழந்தை.....
காதல் நம் குழந்தை......
நீ !!!!நான்!!!! காதல்!!!!!
இது போதும் எனக்கு
--ரவிஷ்னா

Tuesday, July 29, 2008

சொல்லடி என் தேவியே


நான் உன் மீது கோபப்படும் போது
என் மீதான அன்பு இரட்டிப்பு
ஆகுவதாக கூறுகின்றாய்.
பசப்பு வார்த்தைகளை நம்புபவன் அல்லன் நான்.
இப்பொழுதும் நான் உன் மீது கோபப்படுகிறேன்.
நீ என்னை பிரிந்தமைக்காக ....
இப்பொழுதும் என் மீதான அன்பு
இரட்டிப்பாகுகிறதா???
சொல்லடி என் தேவியே
--ரவிஷ்னா

தப்பித்தார்கள்

சேர,சோழ,பாண்டியர்
காலத்தில் போர்க்களத்தில் கூரிய
ஆயுதங்கள் pஅயன்படுத்தினார்கலாம்....
பொருட் செலவு எவ்வளவோ???
தெரியவில்லை....
நீ அப்பொழுது உதித்திருந்தால்
நீ உதிர்க்கும் வார்த்தைகளிலேயே
எதிரிகளின் உயிர் உதிர்ந்திருக்கும்....
நல்ல வேளை
தப்பித்தார்கள்.
--ரவிஷ்னா

இரத்தம் சிந்தினேன்

வியர்வை சிந்த விளையாடினால்

உடலுக்கு இனிது...

விளையாடிவிட்டாள் என்

இதயத்தோடும்,வாழ்க்கையோடும்.....

சிந்தியது வியர்வை அல்ல....

இரத்தம்..... சிந்தப்பட்டது என்னிடமிருந்து,

என் இதயத்திடமிருந்து ...

தவறாக புரிந்து கொண்டாள் போலும் ....

--ரவிஷ்னா

Monday, July 28, 2008

புரிதல் எனப்படுவது


எதற்காகவோ வந்த சண்டையில்
உன்னிடம் நான் பேச மாட்டேன்
என்று நானும்,நீயும்
மாறி மாறி கூற நேரமும் முடிய
பிரிந்து சென்றோம் அன்று....
மீண்டும் சந்தித்த போது
பந்தயத்தை மறந்து இருவருமே
பேச இதழ் விரிக்கும் போது,
நேற்றைய நினைவுகள் நிழலாட
அமைதி காத்தோம்.....
ஒருவருக்கொருவர் உள்ளேயே
திட்டிக் கொள்கிறோம்....
நீ தான் பேசினால் என்ன ???
சரி நாம் தான் விட்டுக்
கொடுப்போமே என்று
நினைத்து ஒன்றாக இருவருமே
பேச ஆரம்பிக்கிறோம்....
பேசிக்கொண்டாலும், பேசாமல் இருந்தாலும்
ஒருவர் மனதை ஒருவர் புரிந்து
கொள்கிறோம் தோழியே!!!
புரிதலில் உள்ளது காதல்....
பிரிதலில் இல்லை காதல்...
அப்படியே பிரிந்தாலும் அது
காதல் இல்லை....
அதில் காதலும் இல்லை...
--ரவிஷ்னா

Sunday, July 27, 2008

கனவிலும்,நினைவிலும்


உறங்குகின்ற போது கண்களை

விழித்துக் கொண்டே உறங்குகின்றேன்....

கண்களை மூடினால் தான்

கனவுகள் வரும்....

கனவுகள் வந்தால் அதில்

நீ தான் வருவாய்....

உன் வருகையை நான்

விரும்பவில்லை கனவிலும்,நினைவிலும்.

--ரவிஷ்னா

என் செய்வேன் நான்???


இப்பொழுதெல்லாம் நான் உறங்க மறுக்கிறேன்...

உன் நினைவுகள் கனவிலும்

வலி கொடுத்து விடும்

என்பதற்காக .....

விழித்துக் கொண்டு இருந்தாலும்

உன் நினைவுகள் வலியினை மட்டும்

தந்து செல்கின்றன.....

என் செய்வேன் நான்???

--ரவிஷ்னா

சிரிக்காதே


பெண்ணே !!!உன்னை சிரிக்க வேண்டாம்
என்றேன் கேட்டாயா???
இப்போது கள்ளர்கள் கோணிப் பையை
எடுத்துக் கொண்டு வருகின்றனர்...
சிந்திய முத்துக்களை அள்ளுவதற்கு....
--ரவிஷ்னா

காதலுக்காக


ஒரு வேளை எங்களுடைய
காதல் தோல்வி அடைந்தால்
எனக்காக அவளும்,
அவளுக்காக நானும்
உயிர் துறக்க மாட்டோம்....
காதலுக்காக நாங்கள் இருவருமே
உயிர் துறப்போம்...
--ரவிஷ்னா

அம்மா


கடவுள் நேரில் வருவதில்லை....
வேறு உருவத்தில் தான்
வருவதாகக் கூறுவர்.....
என்னிடம் என் தாய் என்னும்
உருவத்தில குடியிருக்கிறார்....
--ரவிஷ்னா

இதயம் வலிக்கின்றது


இதயத்தில் வலிகள் பல உள்ளன....
ஒவ்வொரு வலிகளும் வந்த
வழிகள் வேறு....
நீ வந்த வழியில் வந்த
வலிகள் பலவாறு.....
எல்லா வலிகளையும் மறந்து
எந்தன் வழியில் செல்கின்றேன் ....
மீண்டும் என் வழியில் வழிய வருகின்றாய்...
வளியில் உந்தன் நினைவுகளை
விட்டாலும் வலிகள் மீண்டும்
எந்தன் இதயத்தில் வழிகின்றன...
இது தொடர்ந்தால் ஒரு வேளை
என் இதயம் சுருங்கி விரிவதற்க்குக்
கூட இடமில்லாமல் போய் விடும்....
நீ போய் விடு பெண்ணே!!!
என்னை வாழ விடு பெண்ணே!!!
--ரவிஷ்னா

Friday, July 25, 2008

ஒன்று தான் நீயும் நானும்

கல்லால் ஆன இதயத்தோடு வாழும் நீயும்,

இதயத்தை எங்கேயோ தொலைத்து விட்டு

இதயமில்லாமல் வாழும் நானும்

ஒரு வகையில் ஒன்றானோம் ....

--ரவிஷ்னா

அணையப் போகின்ற விளக்கு-என் இதயம்


அமைதியாய் இருந்த என் மனம்
ஆரவாரத்தில் குதிக்கின்றது
உன்னைக் கண்ட நாள் முதல்...
இது எதற்காக என்பதை நான் அறியேன்...
ஒரு வேளை இவ்வாறாக இருக்கலாம்...
அணையப் போகின்ற விளக்கு
பிரகாசமாய் எரியும் என்பார்களே!!!
--ரவிஷ்னா

Thursday, July 24, 2008

நீ என் உலகம்


உலகம் உருண்டை.
யார் சொன்னது???
எனக்கு உலகம் ஐந்து அடியும்
ஐம்பது கிலோ எடையும் தான்...
உன்னை தான் கூறினேன்...
பெண்ணே!!!
நீ என் உலகம் என்று......
--ரவிஷ்னா

வசதி குறைவு

செல்வ செழிப்பில் பிறந்து
பஞ்சு மெத்தையில் புழங்கிய நீ
எப்படி என் சிறிய இதயத்தில்
குடியிருக்கிறாய்???
வசதிகள் குறைவு தான்.
சமாளித்துக் கொள் பெண்ணே!!!
--ரவிஷ்னா

பழைய நினைவுகள் இன்றும் புதியதாய்


நீயும் நானும் ஓடி விளையாடிய
கடற்கரை மணலும்,
சிறு சிறு கேலி கூத்துக்கு
நீ என் மீது கோபித்துக்
நான் உன்னிடம் வந்து செல்லமாக
பேசி உன்னை சமாதான படுத்துவதும் ,
பின்னர் நீ "ச்சி போடா" என்று
என் தோள் மீது சாய்ந்து கொள்வதும்,
அந்த இனிமையான தருணங்களை
இன்று நினைத்தாலும் நெஞ்சம் கணக்கிறது.
நீ இன்று எப்படி இருக்கிறாய்???
நான் இன்று உன்னை நினைக்கின்ற
நேரத்தில்,நீ என்ன செய்கிறாய்
என்று எனக்கு தெரியாது....
என்னை போல்
நினைத்து பார்க்க நேரம் இருக்கிறதா???
இருந்தால், என்னை பற்றி நினைத்து
பார்க்கிறாயா???
நம் காதல் நினைவுகளை பற்றி
நினைத்து பார்க்கிறாயா???
நாம் ஒன்றாய் இருந்த
தருணங்கள் உன்னையும் மன
உளைச்சலுக்கு ஆளாக்குகிறதா????
அப்படி செய்தால் நிச்சயம்
இன்னும் நம் காதல் நம்மோடு
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
என் தேவதையே!!!
பழைய நினைவுகள் இன்றும்
புதியதாய் வந்து விடுகின்றன தான்....
--ரவிஷ்னா

Wednesday, July 23, 2008

எவ்வாறு இருக்கிறேன்?


நீ எனை மறந்ததும்
என்னில் இருந்த உனை நீ மறந்ததும்
நான் எக்காலமும் மறவேன்...
வெகுநாட்களுக்கு பிறகு நீ
என்னை காண நேர்ந்தால்,
என்னிடம் நன்றாக இருக்கிறாயா?
இப்பொழுது எங்கு வேலை பார்க்கிறாய்?
திருமணம் முடிந்ததா?
என்றெல்லாம் கேட்க வேண்டாம்....
என்னை மூன்றாவது மனிதரைப்
போன்று பார்க்காமல்,
எப்போதும் போல் பார்த்தால் போதும் ....
ஒரு புன்னகை ஒன்றை
பரிசைத் தந்தால் போதும் ....
உன் அன்புக்கு அப்பொழுதும்
அடிமையாவேன் ......
--ரவிஷ்னா

Tuesday, July 22, 2008

எந்த காதலும் தோற்ப்பதில்லை


எந்த காதலும் தோற்ப்பதில்லை......
காதலுக்காக உயிரை விடுவது
உண்மையில் முட்டாள் தனம் இல்லை.....
தான் அவன்/அவள் மீது கொண்ட
காதல் எவ்வளவு ஆழமானது
என்பதை தெரிவிப்பதே அந்த
புனிதமான இறப்பின் நோக்கமாகும்.....
--ரவிஷ்னா

மழை


என்று தான் என் வேதனை தீருமோ???
தினம் தினம் எங்கேயாவது ஒரு
மூலையில் நான் அழுது கொண்டு
தான் இருக்கிறேன்....
பிறர் அழுது விடக் கூடாதென்பதற்காக....
மழை........
--ரவிஷ்னா

கேட்டுப் பார் பெண்ணே

நான் உன் மீது கொண்ட காதலை
அந்த காற்றிடம் கேட்டு பார்....
என் சுவாசம் நீ தான் என்பதை தெரிவிக்கும்....

நான் உன் மீது கொண்ட காதலை
அந்த மழையிடம் கேட்டு பார்...
நீ என்னை விட்டு பிரிகின்ற போது
என் மனம் படும் வேதனையை
தன் கண்ணீரால் தெரிவிக்கும்.....

நான் உன் மீது கொண்ட காதலை
அந்த நெருப்பிடம் கேட்டுப் பார் ...
நீ என்னை விட்டு விலகிச்
சென்ற நொடிகளில் நான் கொண்ட
கோபத்தை அனலாய்த் தெரிவிக்கும்.....

நான் உன் மீது கொண்ட காதலை
இந்த பூமியிடம் கேட்டுப் பார்...
தன்னை விட அவன் மனம்
பரப்பளவில் பெரியது என்பதையும்
அதில் உன் ஒருத்திக்கு மட்டுமே
இடம் உண்டு என்பதையும் தெரிவிக்கும்.....

நான் உன் மீது கொண்ட காதலை
சூரியனிடம் கேட்டுப் பார்....
நீ இல்லாத போது நான் பட்ட
வேதனையை வெப்பமாக தெரிவிக்கும்...

நான் உன் மீது கொண்ட காதலை
நிலவிடம் கேட்டுப் பார்.....
அதன் அழகில் குறை உண்டு என்பதை
பலமுறை சுட்டி காட்டியமையை தெரிவிக்கும்.....

எதுவும் வேண்டாம்.....
நான் உன் மீது கொண்ட காதலை
உன் இதயத்திடமே கேட்டுப் பார்...
உண்மையில் அது இதயமாக இருந்தால்
அந்த உண்மையை உரைக்கட்டும் .....
--ரவிஷ்னா

Monday, July 21, 2008

மறு பிறவி

எனக்கு மறு பிறவியின் மீது
நம்பிக்கை இல்லை.
ஒரு வேளை அவ்வாறு இருந்தால்
இறைவா தயவு செய்து என்னை
பெண்ணாகவும் ,அவளை ஆணாகவும்
படைத்து விடு...
அதிலும் அவளை விட அழகாக
என்னை படைத்து விடு.....
அப்பொழுது புரிந்து கொள்வாள்
இப்பிறவியில் நான் படும் வேதனையை ....
--ரவிஷ்னா

மௌனம் கலைத்து விடு


பெண்ணே!!!நான் பல முறை என் காதலை
கூறியும் நீ மௌனம் ஒன்றையே
பதிலாக தந்திருக்கிறாய்....
இது தொடர்ந்தால் நீ எனக்கு
மௌன அஞ்சலி செலுத்தும் காலம்
வந்து விடும்.....சொல்லாத காதல்
என்றும் வெல்லாது.....
கூறிவிடு உன் பதிலை
மௌனம் கலைத்தப் பின்னர்
--ரவிஷ்னா

ஒரு உண்மை உண்மையாகிறது


பெண்ணே!! நான் பிறக்கின்ற போதும்
எதையும் எடுத்து வந்தது கிடையாது...
இறக்கின்ற போதும் எதையும் எடுத்துச்
செல்வது கிடையாது......
ஆம் இது உண்மை தான்
நான் என் இதயத்தை விட்டு செல்கிறேன்
இங்கேயே உனக்காக.....
நான் இறக்க போகிறேன்.....
ஒரு உண்மை உண்மையாகிறது பெண்ணே ....
--ரவிஷ்னா

காலம் கனியட்டும்


நான் கவிதை என்று கூறும்
நான்கைந்து வரிகளை படிக்கும்
என் நண்பர்கள் என்னைப் பற்றி
கூறுவது நான் யாரையோ
காதலிக்கிறேன் என்று....
மூன்றாவது மனிதர்கள் அவர்களுக்கு
தெரிகின்ற ஒன்று உனக்கு புரியவில்லை
பெண்ணே நான் என் செய்வேன் ......
ஆனால் நீயோ படித்து விட்டு
நன்றாக இருக்கின்றது என்று இரு
வார்த்தைகளில் கூறிவிட்டு மறைகிறாய் ....
நீ புரிகின்ற காலம் என்று வருமோ ???
அது வரை நான் கண்டிப்பாக காத்திருப்பேன்....
காலம் கனியட்டும்...
உன் மனம் மாறட்டும்....
--ரவிஷ்னா

Friday, July 18, 2008

தலைப்பு தெரியவில்லை


நான் உன் மேல் கொண்டது
நட்பா? காதலா?
தலைப்பு தெரியவில்லை...

நான் உன்னை எப்படி அழைக்க?
தோழியா? காதலியா ?
தலைப்பு தெரியவில்லை...

என் வேதனைக் காலங்களில்
நீ என்னோடு இருந்தாய்.
அந்தக் காலங்களில்
நான் கண்டேன் என் எதிர் காலத்தை...

அப்பொழுது தான் நான் உன் மேல்
அன்பு கொண்டேன்....
இன்னும் தெரியவில்லை
அதன் தலைப்பு...

குழப்பங்கள் எதற்கு நீயே சொல்லி விடு
என்று உன்னை நெருங்கிய நொடியில்
நீ கொடுத்த கடிதம் தெரிவித்தது
அது நட்பு தான் என்பதை...

மெல்லிய புன்னகையுடன்
இடம் பெயர்ந்தேன் வாழ்த்துக்களுடன் ....
தெரியாத தலைப்பு இப்பொழுது தெரிந்தது !!!
--ரவிஷ்னா

Thursday, July 17, 2008

வலிக்கிறது என் மனம்


வறுமையின் துயரத்தால் எவ்வளவோ
வேதனையை அனுபவித்த நான்
அந்த வலியினை தாங்கிக் கொண்டேன்...
ஆனால் பெண்ணே!!!
நீ என்னை மறந்து விடு
என்று கூறிய வார்த்தைகள்
என் இதயத்தை கூரிய ஆயுதத்தைக்
கொண்டு குத்திவிட்டன!!!
என்னால் தாங்க முடியவில்லை
இந்த மன வலியினை.....
இப்படியும் ஒரு வலியா???
--ரவிஷ்னா

Wednesday, July 16, 2008

தனிமையின் கொடுமை











தனிமையின் தன்மை கொடுமையான இனிமை ...
அதனினும் கொடுமை என்பேன் ,
ஒரு மயில் நீ அவ்வப்போது
வந்து செல்வதும்,
நான் ஒருமையாய் இருக்கின்ற போது
உன் நினைவுகள் வந்து செல்வதும்.....

எதுவுமே தெரியாமையால்,
ஒன்றுமே புரியாமையால்,
எதையோ எழுதியமையால்,
இதனைக் கவிதை என்கிறேன்.

இவ்வாறு பலவற்றை எழுதியமையால்
என் பேனாவில் மை தீர்ந்தது.
ஹையோ! என்று பதரியமையை
அறிந்த என் மனது
உன் உடலில் ஓடும் குருதிதனை
ஊற்றி எழுது என்று ஆலோசனை
கூறியமையால் எனக்கும் என் மனதுக்கும்
சிறிய காலம் பேச்சு வார்த்தை இல்லை...

பாவம்!!! என் மனம்
எப்படி அறியும்???
நீ என் குருதியில் கலந்துல்லாய்
என்பதை
--ரவிஷ்னா

Tuesday, July 15, 2008

நண்பர்களுக்கு நன்றி






ஒரு வேளை என் கவிதைகளை
என்னை பிடித்தவர்கள் மட்டும்
படித்திருந்தால் நான் கவிஞன்
ஆகி இருக்க மாட்டேன்.....
மற்ற நண்பர்களும் படித்தமையால்
இன்று கவிஞன் என்று கூற படாவிட்டாலும் ,
கவிஞன் என்ற சொல்லுக்காவது அர்த்தம்
தெரியும் அளவிற்கு வளர்ந்துள்ளேன்....
என் இனிய நண்பர்களுக்கு நன்றி....
--ரவிஷ்னா

சாகா வரம் அல்ல

உன்னை நெருங்கி வருகின்ற
பொழுதெல்லாம் ஏனோ ஒரு தாகம்,
ஏனோ ஒரு தயக்கம் ,
ஏனோ ஒரு அச்சம்
உன்னிடம் என் காதலை சொல்லி விட தடுத்தது ......
இப்படியே நீண்டால் என்றாவது ஒரு
நாள் சொல்லாமலே என் காதல்
தொலைந்து விடும் ....
அப்படியொன்று நிகழ்ந்தால் கண்டிப்பாக
எம தேவனிடம் போராடுவேன்....
என்னை இன்னும் கொஞ்ச காலம்
வாழ விடு என்றல்ல....
உன்னையும் அழைத்து வர வேண்டும் என்று .....
--ரவிஷ்னா

காவிய பொய்

காவியங்களில் நிலவினை "சந்திர தேவன் "
என்று ஆண் பாலாக தான் கூறினர்...
நானும் நம்பினேன் முன்பு ....
உன்னை பார்த்த பின்பு தான்
தெரிந்தது அது பொய் என்பது....
காவியங்களில் கூட பொய் தானோ ???
--ரவிஷ்னா

Monday, July 14, 2008

கனவில் மட்டும் வராதே


ஊரே உறங்கி கொண்டிருக்கும்
உன்னதமான இரவு வேலை....
நிலா மகளும் விழித்திருக்கும்
நிசப்தமான இரவு நேரம்....
வான பூமியில் நட்சத்திரங்களும்
கொட்டி கோலம் போட்டு
கொண்டிருக்கும் இன்னிசை இரவு ...
சில்லென்ற பனி காற்றில்
உன்னை நினைத்துக் கொண்டு
சிறகுகள் விரித்து பறக்கின்றேன்
ஒரு பறவையை போல...
அப்படியே கண்ணிமைகள் கட்டி அணைக்க
உறக்கத்தின் வசப்படுகிறேன் நான்....
இடையில் உன்னை கனவில் காண
திடுக்கிட்டு விழிக்கிறேன்...
தூக்கத்திலும் வந்து விட்டாயா
என் நிம்மதியை குலைக்க....
உன்னிடம் ஒரு கோரிக்கை...
தயவு செய்து கனவில் மட்டும் வராதே...
யாருக்கு தெரியும் என்
கடைசி உறக்கம் அதுவாக கூட
இருக்கலாம் பெண்ணே...
என்னை வாழ விடு....
--ரவிஷ்னா

Sunday, July 13, 2008

அன்புள்ள இறைவனே!!!!!

அன்புள்ள இறைவனே,
ஆத்திரத்தில் நான் எழுதும் கடிதம் ....
நான் இங்கு நலம் இல்லை...
நீயங்கு நலமா ???
கண்டிப்பாக நலமாகத்தான் இருப்பாய் ....
நாங்கள் படும் வேதனையை
கண்டு களிப்பவனாயிற்றே நீ...
ஆகையால் தான் கூறினேன்
இங்குள்ள அனைவருக்கும் உள்ள
பிரச்சனைகள் வேறு வேறு விதம் ......
ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை
காரணம், பாழாய்ப்போன இந்த
காதல் தான் ....
இவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு
மூன்று வழிகளை கூறுகிறேன்
தயவுசெய்து அதனை செய்து விடு
இறைவனே!!!
ஒன்று, காதலை அடியொடு
பிடிங்கி விடு
இரண்டு, ஆண்களின் கண்களை
பறித்து விடு
மூன்று, பெண்களுக்கு காதலிக்க
கற்று கொடுத்து விடு ....
இதில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும்
நிச்சயம் இந்த உலகம் அமைதி பெரும்
இறைவனே!!!
தகவல் கிடைத்தவுடன் பதில்
கடிதம் அனுப்பவும்...
பதிலை எதிர் பார்த்து ,
--ரவிஷ்னா

Thursday, July 10, 2008

GOOGLE

எனக்கும் GOOGLEKKUM சண்டை
வந்தது.....
எதை கொடுத்தாலும் ஏதாவது நான்கைந்து
இணைய தள முகவரிகளை
கொடுத்துக் கொண்டிருந்தது.....
நான் தோற்று விடுவேனோ
என்று நினைத்தேன் .....
சட்டென்று நினைவுக்கு வந்தது
உன் நினைவுகள் ....
உன் அழகுக்கு இணையான பெண்ணும்
இந்த பூமியில் உண்டா?
என்று வினா தொடுத்தேன்.....
இன்னும் தேடிக் கொண்டிருக்கிறது
பெண்ணே!!!
--ரவிஷ்னா

Wednesday, July 2, 2008

ஆச்சர்யம்

உன்னால் முடியாத ஒன்று
பிறரால் முடிகிற போது
அந்த ஒன்று தான் உனக்கு
ஆச்சர்யமானதாய் தெரியும்....

பிறர் ஆச்சர்ய பட்ட ஒன்று
உன்னால் முடிந்த போது
உனக்கு சாதாரணமானதாய்
தெரியும்.....
--ரவிஷ்னா

தோல்வியும் வெற்றியும்

தோல்வியை கண்டு
துவண்டு விடாதே!!
உண்மையில் வெற்றியை
விட தோல்வி
தான் உன்னை ஊக்கப்படுத்துவதும் ,
உற்சாகப்படுத்துவதும் ஆகும்....

வெற்றி அடைந்தால்
மகிழ்ச்சி கொள்ளாதே
அதனை ஒரு தோல்வியாய்
நினைத்து பார் ....
அதை விட பெரிய வெற்றியினை
நீ அடைந்து விடுவாய் .....
--ரவிஷ்னா

Sunday, June 29, 2008

பேசும் படம்

'படிக்காதவனாய்' இருந்த என்னை
'கல்லூரி' வரை செல்ல வைத்த
என் 'செல்லமே'.உன்னை காணும்
போது என் 'மனசெல்லாம்'
ஒரு வித 'மின்னலே'

'12B' பேருந்தில் பயணம் செய்கிற
நாளெல்லாம் உன்னை கண்டேன்.
இதுவரை எனக்கு தெரியவில்லை
'யாரடி நீ மோகினி' .

உன்னை 'கண்ட நாள் முதல்'
'
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'

உன் மீது வைத்த 'ப்ரியமுடன்'
எழுதுகிறேன் ஏனோ ஒரு 'காதல் கவிதை' ...

'அழகிய தீயே' உன் 'முகவரி'
கொடுத்து விடு.இல்லை எனில்
உன் 'சூர்யப் பார்வை' யால் என்னை
சுட்டெரித்து விடு ...

உன்னை 'முதல் முதலாய்'
'பார்த்த நாள் முதல்' நான் 'காதல் கொண்டேன்'....
நீ சரி என்று சொன்னால் பெண்ணே உன்னை
என் 'கண்ணுக்குள் நிலவாய்' வைத்து
பாதுகாப்பேன் .....

இறைவனே அவளிடம் நான் என்
காதலை தெரிவிக்க எனக்கு
'வல்லமை தாராயோ' ......

நீ என் பெயரை கூறி
அழைக்கும் போதெல்லாம் என்
'உள்ளம் கேட்குமே' மீண்டும் மீண்டும் ...
உண்மையில் அது ஒரு 'காதல் கோட்டை' ...

பெண்ணே நீ என்னிடம் உன்
'காதல்' (லை ) தெரிவித்த போது
நான் உன்னில் 'கண்டேன் சீதையை' ....
பின்பு இந்த 'ராமன் தேடிய சீதை'
இவள் தானோ என்று
ஒரு 'தேவதையை கண்டேன்' ...

பெண்ணே!!!'இன்று முதல் '
நீ என்னை காதலிப்பதன் மூலமும்
நான் உன்னை காதலிப்பதன் மூலமும்
நாம் 'காதலுக்கு மரியாதையை' செய்து
'காலமெல்லாம் காதல் வாழ்க' என்போம் .....
--ரவிஷ்னா

Tuesday, June 17, 2008

அழகு ஓரு வர்ணனை

தேவியே !!!உன் கூந்தலோடு
ஒப்பிடுகையில் அரச
மரத்தடியில் வீற்றிருக்கும்
விநாயகப் பெருமானும்
வெண்மை தான்!!!

பௌர்ணமி வட்ட நிலவை
வெட்டி எடுத்து, தட்டி
ஒட்டியது போன்றது உன்
நெற்றியில் உள்ள திலகம்!!!

கயல் போன்ற உன் விழிகளை
ஒவ்வொரு முறை விழிக்கும் போதும்
உன் பார்வை படாதா என்று
ஏங்குகின்ற ரோஜா மலர்கள் !!!

உன் மலரினும் மெல்லிய
பூவிதழ் விரித்து நீ
சிந்துகின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் ஓரு ராகம்!!!

புறாவின் கழுத்தைப் போன்று
குறுகிய சிறு கழுத்தில்
நவமணிகள் மின்னுதல்,இரவில்
வானத்தில் உள்ள நட்சத்திரம்
மின்னுவதைப் போன்றது !!!

சுண்டு விரலும் உன் இடை
கண்டு மெலிந்து விட
எண்ணிக் கொண்டிருக்கிறது போலும் !!!

உன் பொற்பாதங்கள் தரையில்
படாமலிருக்க நான் தூவிய
குறிஞ்சி மலர்கள் உன்
காலுடன் கொஞ்சி விளையாட
எண்ணி குத்தி விட்டால்
என்னை மன்னித்து விடு பெண்ணே!!!

உன்னை வடித்த போது
பிரம்மனும் கவலை
கொண்டிருப்பான் , மானிடனாய்
பிறக்காமல் போனோமே என்று !!!
--ரவிஷ்னா

Wednesday, June 11, 2008

நினைவுகள்

ஒரு நாளைக்கு எத்தனை காட்சிகளை
கண்டாலும், ஒரு சில காட்சிகள் தான்
நினைவில் நிலைக்கின்றன.....
அதைப் போன்று நான் எத்தனை
பெண்களை பார்த்தாலும் உன்
நினைவுகள் மட்டுமே நிழலாடுகின்றன......
--ரவிஷ்னா

நம்பிக்கை

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கின்ற
பொழுது எண்ணி பார்க்காத மனம்
தந்தையிடம் பணம் வாங்குகின்ற பொழுது
எண்ணி பார்க்கின்றது....
இந்த மனம் மாறினால் தான்
நம்பிக்கை என்னும் நட்சத்திரம் பிறக்கும்.....
--ரவிஷ்னா

Thursday, June 5, 2008

நிலவில் மனிதன்

நிலவில் மனிதன் வசிக்க முடியுமா?
ஆராய்ச்சி செய்கின்றனர் விஞ்ஞானிகள்...
பல நாட்களாக உன் இதயத்தில்
வாழ்கிறேன்
அதை அறியாமல் இவர்கள்
ஆராய்ச்சி செய்கின்றனர்.
இவர்கள் விஞ்ஞானிகளா???
--ரவிஷ்னா

வரம்

இறைவனிடம் வரம் ஒன்று கேட்பேன்
ஒன்று என் நினைவை நிறுத்தி விடு.
அல்லது அவளுக்கு என் நினைவை கொடுத்துவிடு ....
--ரவிஷ்னா

Monday, May 19, 2008

நிலவே நீ மாறிவிடு

நிலவே ! நீ பௌர்ணமியின் போதும்
அமாவாசை போலவே இரு...
ஏனெனில் மேலே இருக்கும் உனக்கும்,
கீழே இருக்கும் அவளுக்கும்
எனக்கு வித்தியாசம் தெரியவில்லை...
--ரவிஷ்னா

நமஸ்காரம்

பெண்ணே! நீ காலையில் எழுந்தவுடன்
சூரிய நமஸ்காரம் செய்கிறாய் .....
உண்மை அதுவல்ல
சூரியன் தான் உனக்கு தேவதை
நமஸ்காரம் செய்கிறான் ....
--ரவிஷ்னா

காதல் வைரஸ்

மென்பொருள் நிபுணர்களே !!!
எது எதுக்கோ மென்பொருள் உருவாக்குகிறீர்கள் ....
பெண்களின் உள்ளத்தை அறிந்து கொள்ள
ஒரு மென்பொருளை உருவாக்கி
வருங்கால சந்ததியினரிடம் கொடுங்கள்...
அவர்களாவது புரிந்து கொள்ளட்டும்....
பெண்களின் மனதில் எத்தனை
காதல் வைரஸ் இருக்கிறதென்பதை...
--ரவிஷ்னா

அன்புக்கு அடிமை (இல்லை)

பெண்ணே ! அன்புக்கு நான் அடிமை
என்று சொல்லாதே....
சொன்னால் ஒரு முறையேனும் நீ
என் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்...
--ரவிஷ்னா

கொள்ளை

நீ என் இதயத்தை கொள்ளை
கொண்டு விட்டாய் என்றாயடி ....
பெண்ணே! கொள்ளை கொண்டு சென்றவன்
எதையும் திருப்பித் தருவதில்லை...
அப்படியிருக்க நீ எப்படி உன்
இதயத்தை திருப்பிக் கேட்கலாம் .......
--ரவிஷ்னா

வாழ்க்கை மாற்றம்

உன் காதல் என்னும் போதையை
பருகியதனால் நான் தேவன் ஆனேன்...
அதிலிருந்து உன் பின்னால் அசுரனைப்
போன்று சுற்றுகிறேன்....
முனிவன் ஆகப்போகிறேன்
என்பதை புரியாமல்...
--ரவிஷ்னா

துளிகள்

பெண்ணே ! நீ காலையில்
எழுந்தவுடன் செடிகளின் மீது
உள்ள பனித்துளிகளை ரசிக்கிறாய் ...
உண்மையில் அது பனித்துளிகள் அல்ல....
நான் அந்த செடிகளின் மீது
கொண்ட பொறாமையில் விட்ட
கண்ணீர் துளிகள்.......
--ரவிஷ்னா