Sunday, November 16, 2008

உன் குழந்தையாய் நான்....


உன் தலையில் சூடும் பூவாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் மறுநாள் காலையில்
வீசி எறிந்து விடுவாய் ...
வேண்டாம் அப்பிறப்பு....

உன் நெற்றியில் இடும் திலகமாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் மறுநாள் குளியலின் போது
எடுத்து விடுவாயே !!!
வேண்டாம் அப்பிறப்பு....

உன் கண்களில் இடும் கரு மையாய்
நான் இருக்க விரும்புகிறேன்....
ஆனால் அதுவும் ஒரு நேரத்தில்
கரைந்து போகக் கூடும் ....
வேண்டாம் அப்பிறப்பு....

உன் உடலோடு ஒட்டிக் கொள்ளும்
உடையாய் நான் இருப்பேன்...ஆனால்
மறுநாள், நீ அழுக்கென்று ஒதுக்கி விடுவாய்...
வேண்டாம் அப்பிறப்பு....
உன் கணவனாய் நான்
இருக்க விரும்புகிறேன். ஆனால்
நமக்கென்று ஒரு குழந்தை பிறந்தால்
நீ என்னை கவனிக்க மாட்டாய்.
வேண்டாம் அந்த பிறப்பும்......
உன் கால்களை கட்டிக் கொள்ளும்
உன் குழந்தையாய் இருந்திட விரும்புகிறேன்...
அப்பொழுது தான் நான் சினுங்கிடும் போதும்,
சிரித்திடும் போதும் முத்தங்கள் தந்து
என்னைக் கொஞ்சிடுவாய்....
அதுவே வேண்டும் எனக்கு.......
--ரவிஷ்னா