Friday, August 8, 2008

என்னுடைய பல வேதனைகளில் சில-3

*வேதனைகள் அதிகரிக்க அதிகரிக்க
மௌனங்கள் கூடுகின்றன.
என்னை பார்த்து என் நிழலும்
கைகொட்டி சிரிக்கின்றது.....
ஆறுதலுக்கு கூட அதுவும் கூட
இருப்பதில்லை....

*மனது வலிக்கின்ற போதெல்லாம்
புல்தரையில் புலம்புகிறேன்
புர்க்களோடு...
அதுவும் என் வேதனையை கேட்டு
அழுது விடுகிறது...
அதன் மேல் கண்ணீரை காண்கிறேன்

*எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்
கொள்ள முயற்சிக்கிறேன்.....
என்னால் முடியவில்லை ....
என் சிறிய மனம்
குழந்தையைப் போன்று திரும்ப திரும்ப
பழயதை நினைவுக்கு கொண்டு
வந்து விடுகின்றது.....

*என் மனதுக்கு நன்றி
சொல்கிறேன்.சில நல்ல உள்ளங்களின்
நல்ல உணர்வுகளை வெளிக்காட்ட
வைத்தமைக்கு...

*என் கண்களில் இருந்து
வழியும் கண்ணீரை துடைக்க
ஒரு நண்பன் கூட இருந்தது
சற்றே ஆறுதலாக இருந்தது.....
இப்பொழுது அதை எண்ணுகையில் ????
உன்னை மீண்டும் பார்த்தால்
என் கண்ணீரை துடைப்பதர்க்காகவே
நான் அலுத்து விடுவேன்.....
--ரவிஷ்னா

1 comment:

Dominic RajaSeelan said...

good ravi,
arumaiyaana kavithai,
arumaiaana unarvugal.