Monday, July 28, 2008

புரிதல் எனப்படுவது


எதற்காகவோ வந்த சண்டையில்
உன்னிடம் நான் பேச மாட்டேன்
என்று நானும்,நீயும்
மாறி மாறி கூற நேரமும் முடிய
பிரிந்து சென்றோம் அன்று....
மீண்டும் சந்தித்த போது
பந்தயத்தை மறந்து இருவருமே
பேச இதழ் விரிக்கும் போது,
நேற்றைய நினைவுகள் நிழலாட
அமைதி காத்தோம்.....
ஒருவருக்கொருவர் உள்ளேயே
திட்டிக் கொள்கிறோம்....
நீ தான் பேசினால் என்ன ???
சரி நாம் தான் விட்டுக்
கொடுப்போமே என்று
நினைத்து ஒன்றாக இருவருமே
பேச ஆரம்பிக்கிறோம்....
பேசிக்கொண்டாலும், பேசாமல் இருந்தாலும்
ஒருவர் மனதை ஒருவர் புரிந்து
கொள்கிறோம் தோழியே!!!
புரிதலில் உள்ளது காதல்....
பிரிதலில் இல்லை காதல்...
அப்படியே பிரிந்தாலும் அது
காதல் இல்லை....
அதில் காதலும் இல்லை...
--ரவிஷ்னா

5 comments:

Sudhanmathi said...

Gud ... keep it up...

Sudhanmathi said...

Gud ... keep it up ... ravi

Anonymous said...

Gud keep it up... ravi...

Anonymous said...

Very Nice. All are nice.

Venkata Ramanan S said...

Nice one!! kudos!!

keep writing :)