Sunday, July 27, 2008

இதயம் வலிக்கின்றது


இதயத்தில் வலிகள் பல உள்ளன....
ஒவ்வொரு வலிகளும் வந்த
வழிகள் வேறு....
நீ வந்த வழியில் வந்த
வலிகள் பலவாறு.....
எல்லா வலிகளையும் மறந்து
எந்தன் வழியில் செல்கின்றேன் ....
மீண்டும் என் வழியில் வழிய வருகின்றாய்...
வளியில் உந்தன் நினைவுகளை
விட்டாலும் வலிகள் மீண்டும்
எந்தன் இதயத்தில் வழிகின்றன...
இது தொடர்ந்தால் ஒரு வேளை
என் இதயம் சுருங்கி விரிவதற்க்குக்
கூட இடமில்லாமல் போய் விடும்....
நீ போய் விடு பெண்ணே!!!
என்னை வாழ விடு பெண்ணே!!!
--ரவிஷ்னா

No comments: