Thursday, February 5, 2009

அழுகையின் ரத்தம்


எனக்கு ஏற்பட்ட சோகங்களை
நினைத்து பார்கையில் அழுகை
பீறிட்டு வருகிறது
ஏனோ தெரியவில்லை அழுகையை
என்னுள்ளே அடக்கிக் கொண்டேன்
அதனால் அடங்கிப் போன கண்ணீரெல்லாம்
உயிர் பெற்று உடலினுள்
ஓடத் துவங்கியது ரத்தத்திற்கு பதிலாக..........
**************************************************
ரவிஷ்னா
**************************************************

Wednesday, February 4, 2009

பட்டும் மலரும் ரோஜா


என் தோட்டத்தில் பூத்த பல
ரோஜாக்களில் ஒன்றை மட்டும் பறித்து
என்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினேன்......
நான் பறித்ததாலோ என்னவோ
அது பறித்த உடனேயே காய்ந்து விட்டது.......
இருப்பினும் இன்னும் என்னுள்
அந்த ரோஜாவின் மணம் வீசிக்
கொண்டு தான் இருக்கிறது.......
மறுபடியும் அந்த ரோஜா(அதே ரோஜா) என்
தோட்டத்தில் மலர்ந்து விடும்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.........
***************************************
ரவிஷ்னா
***************************************