~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நான் உன்னை இன்னும் காதலிக்கிறேன்
என்று மேலும் கூறி உன்னை மீண்டும்
என்னை காதலிக்க வைக்க விரும்பவில்லை....
என்று நீ நானில்லாத வாழ்க்கை
மகிழ்வினை தரும் என்று எண்ணினாயோ
அன்றே நீ என்னை விட்டு விலகி சென்றுவிட்டாய்.....
என்னுடனான உன் பிரிவு மகிழ்வினை
தரும் என்று நீ எண்ணினால்
அவ்வாறே இருந்து விடு...
உன் மகிழ்வே எனக்கும் சிறு மகிழ்வினை
தருமென்று நீயும் எண்ணிக்கொள்.....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment