Monday, March 14, 2011

என்ன தான் வேண்டும் உனக்கு???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காற்றில் நடக்கையில் தூசி விழுந்தாலும்
கண் சிமிட்டாத நான்,
உன்னை பார்த்த நொடியிலிருந்து என் ஒற்றை
கண் மட்டும் துடிக்கலாயின !!!

உன் சுவாசக் காற்றினையே நான்
சுவாசிக்கலானேன்!!!

உன் பெயரையே உச்சரிக்கலானேன்!!!
உன்னை வர்ணிப்பதே தொழிலாய்க் கொண்டேன்!!!

பசி, தூக்கம், சுற்றம், நட்பு, உறவு மறந்து
உன்னையே எண்ணலானேன்!!!

இப்படி என் இதயத்தை கொள்ளை கொண்டு விட்டாய்!!!
இன்னும் என்னிடத்தில் என்ன இருக்கிறது!!!

ஏன் என்னை இன்னும் தொடர்கிறாய்???
விட்டு விடு, இனியாவது நான்
வாழத் தொடங்குகிறேன்!!!

இன்னும் என்ன வேண்டும் உனக்கு???

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: