Wednesday, July 23, 2008

எவ்வாறு இருக்கிறேன்?


நீ எனை மறந்ததும்
என்னில் இருந்த உனை நீ மறந்ததும்
நான் எக்காலமும் மறவேன்...
வெகுநாட்களுக்கு பிறகு நீ
என்னை காண நேர்ந்தால்,
என்னிடம் நன்றாக இருக்கிறாயா?
இப்பொழுது எங்கு வேலை பார்க்கிறாய்?
திருமணம் முடிந்ததா?
என்றெல்லாம் கேட்க வேண்டாம்....
என்னை மூன்றாவது மனிதரைப்
போன்று பார்க்காமல்,
எப்போதும் போல் பார்த்தால் போதும் ....
ஒரு புன்னகை ஒன்றை
பரிசைத் தந்தால் போதும் ....
உன் அன்புக்கு அப்பொழுதும்
அடிமையாவேன் ......
--ரவிஷ்னா

No comments: