Sunday, January 4, 2009

கொலையாய் ஆன ஒரு மரண தண்டனை


நீ என்னை மறந்த பின்னும்
உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும்
என்னை பற்றியவை...

உன்னைத் தொட்டு ஓடி
விளையாடிய என் கைகளை காணும் போது
கோவத்தால் துண்டு துண்டாய்
வெட்டி விட்டேன்
இரு கைகளையும்
நீ என்னை மறந்த பின்னும் ..............

உன் உருவத்தை மீண்டும் மீண்டும்
என் கண் முன்னால் கொண்டு வரும்
என் கண்களை
கூறிய ஆயுதத்தை கொண்டு பிடுங்கி விட்டேன்....
நீ என்னை மறந்த பின்னும் .......

உன் வாசத்தையும் சுவாசத்தையும்
தருகின்ற என் சுவாசக் குழாயினை
கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்....
நீ என்னை மறந்த பின்னும் ........

உன் வாசத்தையும் சுவாசத்தையும்
தருகின்ற என் சுவாசக் குழாயினை
கத்தியைக் கொண்டு கத்தரித்து விட்டேன்
நீ என்னை மறந்த பின்னும் ........
உன் பெயரை உச்சரிக்கின்ற
என் நாவினையும் வெட்டி விட்டேன்...
நீ என்னை மறந்த பின்னும் ........

உனக்கென்று ஒரு இடம் இருந்த
என் இதயத்தையும் விடவில்லை....
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை
கையிலெடுத்து கழுத்தினை நெரித்து
கொன்று விட்டேன்.....
நீ என்னை மறந்த பின்னும் ......

மெல்ல தரையில் சாய்கிறேன்.....
உடல் துடித்துக் கொண்டிருக்கிறது......
சற்றே நினைவில் வருகிறாய்.....
மூளையை மட்டும் விட்டு விட்டாய்
என்று அற்புதமாய் சொல்லி நகையாடுகிறாய்......

மகிழ்ச்சியுடன் இறக்கிறேன்....
இல்லை என்னை கொன்று விட்டேன்
மகிழ்ச்சியுடன்
--ரவிஷ்னா

2 comments:

MSK / Saravana said...

என்ன ரவிஷ்னா.. இதெல்லாம்??

Ravishna said...

சும்மா தான் ஒரு டைம் பஸ்ஸ்கு

நட்புடன்,
ரவிஷ்னா