Sunday, July 13, 2008

அன்புள்ள இறைவனே!!!!!

அன்புள்ள இறைவனே,
ஆத்திரத்தில் நான் எழுதும் கடிதம் ....
நான் இங்கு நலம் இல்லை...
நீயங்கு நலமா ???
கண்டிப்பாக நலமாகத்தான் இருப்பாய் ....
நாங்கள் படும் வேதனையை
கண்டு களிப்பவனாயிற்றே நீ...
ஆகையால் தான் கூறினேன்
இங்குள்ள அனைவருக்கும் உள்ள
பிரச்சனைகள் வேறு வேறு விதம் ......
ஆனால் எல்லாவற்றிற்கும் அடிப்படை
காரணம், பாழாய்ப்போன இந்த
காதல் தான் ....
இவற்றில் இருந்து மீண்டு வருவதற்கு
மூன்று வழிகளை கூறுகிறேன்
தயவுசெய்து அதனை செய்து விடு
இறைவனே!!!
ஒன்று, காதலை அடியொடு
பிடிங்கி விடு
இரண்டு, ஆண்களின் கண்களை
பறித்து விடு
மூன்று, பெண்களுக்கு காதலிக்க
கற்று கொடுத்து விடு ....
இதில் எதாவது ஒன்று நிகழ்ந்தாலும்
நிச்சயம் இந்த உலகம் அமைதி பெரும்
இறைவனே!!!
தகவல் கிடைத்தவுடன் பதில்
கடிதம் அனுப்பவும்...
பதிலை எதிர் பார்த்து ,
--ரவிஷ்னா

No comments: