Monday, September 15, 2008

சிதறிய சாரல்கள்-1

*ஒரு நாளைக்கு எத்தனை முகங்களை
பார்த்தாலும் மீண்டும் மீண்டும்
பார்க்கத் தூண்டும் ஒரு வட்ட நிலா
உன் முகம்...

*ஒரு பார்வையாலேயே என்னை
ஊமை ஆக்கி விடுகின்ற காந்த கண்கள் ...

*நீ என் உடன் இருப்பாய் என்றால்
நரகத்திலும் நான் வசிக்கத் தயார்.

*நான் என்னையே தொலைத்து விட்டேன்...
தொலைத்த இடம் தெரிந்தும் தேட மறுக்கிறது மனம் .
இருப்பது உன்னிடம் தானே
பத்திரமாக இருக்கும் என்கிற நம்பிக்கை போலும்...
--ரவிஷ்னா

3 comments:

MSK / Saravana said...

//நீ என் உடன் இருப்பாய் என்றால்
நரகத்திலும் நான் வசிக்கத் தயார்.//

நரகத்திற்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க.

MSK / Saravana said...

நல்லா இருக்கு ரவிஷ்னா.. :)
தலைப்பும்..

Ravishna said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
நன்றிகள் பல சரவணா ....

நட்புடன் ,
ரவிஷ்னா