Wednesday, April 23, 2008

முழுமை

ஹே ரோஜாவே நீ மலர்ந்து
விட்டால் மலராகலாம்
ஆனால் நீ அவள் கூந்தலில் அமர்ந்த
பிறகு தான் முழுமையாக ரோஜவாகிறாய்!!!

என்னவள்

ஏய் ரோஜாவே உனக்கென்ன அவ்வளவு சிரிப்பு
மலர்ந்து விட்டோம் என்ற பெருமிதமோ!!!
என்னவளின் புன்கையை நீ பார்க்கவில்லையா?
ஏய் நிலவே நீ என்ன அவ்வளவு அழகா
இனியவள் அவளை நீ பார்க்கவில்லையா?
ஏய் சூரியனே! ஏன் உனக்கு இவ்வளவு சுட்டெரிக்கும் தன்மை ?
என் தேவதையின் கோவத்தை விட நீ மேலா?
எல்லா வித சுவைகளும் ஒருங்கே கலந்தவள்
அல்லவா அவள்!!!
--ரவிஷ்னா

ஸ்வரங்கள்

ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள்
அத்தனையும் சேர்ந்தது தான் உன் பெயரோ!!!
--ரவிஷ்னா

Tuesday, April 22, 2008

ரசனை

நான் உன்னை ரசிக்கும்
போதெல்லாம் நீ கோபப்படுகிறாய்
ஆனால் தேவதையே நீ
கோப படும்போதும் கூட
நான் உன்னை ரசிக்கிறேன்......
--ரவிஷ்னா

Monday, April 21, 2008

ஏய் மழையே

ஏய் மழையே!
உனக்கும் உன் காதலி பூமிக்கும்
என்ன சண்டையோ?
ஏன் இங்கு வர மறுக்கிறாய்?
நீங்கள் ஒன்றாக இருந்தால் தான்
நாங்கள் நன்றாக இருக்க முடியும்
உணர்ந்து கொள்!!!
--ரவிஷ்னா

வெங்காயம்

ஏய் பெண்ணே!
நீ என்ன அவ்வளவு கல் நெஞ்ச காரியா?
வெங்காயம் நறுக்கும் போது கூட
உன் கண்களில் கண்ணீர்
வரவில்லையே ???
--ரவிஷ்னா

கற்சிலை

பெண்ணே!
நீ சம்மதித்தால்
உன்னை ஓவியமாய் தீட்டி விடுவேன்
ஆனால் நீயோ கற்சிலையாகவே நிற்கிறாய்???
--ரவிஷ்னா

கவிஞன்

ஆயிரம் ஆயிரம் கவிதைகள்
எழுதினாலும் நான் கவிஞன் இல்லை
நீ அதை படிக்காவிடில்!!!
--ரவிஷ்னா

Sunday, April 20, 2008

கல்லறை

இறந்தவனும் எழுந்து பார்ப்பான்
தன் காதலி தன்
கல்லறையை காண வந்தால் .......
--ரவிஷ்னா

குழந்தை

பெண்ணே !
நீ அன்பாக பேசும் போது
குழந்தை ஆகிறேன்.....
நீ அள்ளி அணைக்கையில் நான்
உன் குழந்தை ஆகிறேன்......
-- ரவிஷ்னா

குரல் இனிது

யாழ் இனிது குழல் இனிது
என்பர் மடையர்கள் .....
அதனினும் இனிது
அவளின் இனிமையான குரல் .....
--ரவிஷ்னா

Thursday, April 17, 2008

இரு இதயம்

எல்லோர்க்கும் ஒரு இதயம் தான்
ஆனால் என்னவளுக்கோ இரு இதயங்கள்
எப்படி?
நான் தான் என் இதயத்தை அவளுள்
தொலைத்தேனே

கலப்பு திருமணம்

காதல் என்னும் ஜாதியில் பிறந்தோம்
ஒன்றாய் காதல் செய்தோம்
பின் என்னை விட்டு
இன்னொருத்தனை மணந்தது ஏன் ?
இதற்கு பெயர் தான்
கலப்பு திருமணமோ?
--ரவிஷ்னா