Wednesday, February 4, 2009

பட்டும் மலரும் ரோஜா


என் தோட்டத்தில் பூத்த பல
ரோஜாக்களில் ஒன்றை மட்டும் பறித்து
என்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினேன்......
நான் பறித்ததாலோ என்னவோ
அது பறித்த உடனேயே காய்ந்து விட்டது.......
இருப்பினும் இன்னும் என்னுள்
அந்த ரோஜாவின் மணம் வீசிக்
கொண்டு தான் இருக்கிறது.......
மறுபடியும் அந்த ரோஜா(அதே ரோஜா) என்
தோட்டத்தில் மலர்ந்து விடும்
என்ற நம்பிக்கையுடன் வாழ்கிறேன்.........
***************************************
ரவிஷ்னா
***************************************

2 comments:

ச. ராமானுசம் said...

நல்ல தலைப்பு...
நல்ல உவமை...
நல்ல தவிப்பு..
விரைவில் மலர வாழ்த்துக்கள்

Ravishna said...

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.மீண்டம் வாருங்கள்...

நட்புடன்,
ரவிஷ்னா