Thursday, August 7, 2008

என்னுடைய பல வேதனைகளில் சில-2

*இன்று முதல் நான் தனிமரம்
ஆனேன்....
என் நண்பர்கள் அனைவரும்
பிரிந்து விட்டனர்.
இருப்பவர்கள் என்னை புரிந்து
கொள்ள மறந்து விட்டனர்.

*ஆரம்பத்தில் என்னால் தாங்க
முடியவில்லை....
இப்பொழுது பழக முயற்சிக்கிறேன்...
தனிமையில் இருக்க ....
பழக்கப்பட்டு விடும் என்ற
நம்பிக்கை இருக்கிறது ....

*எல்லா வற்றையும் மறக்க
நினைக்கிறேன்...
மறக்க முடியவில்லை.....
தனிமையின் புலம்பலாய் போகின்றன
என் மௌனங்கள் ....

*கூட்டத்தில் இருக்கும் மரங்களை
விட தனியாய் இருக்கும் மரங்களுக்கே
மௌசு அதிகம்.
மற்றவர்களின் பார்வை அதன் மேல் படும்...
இவ்வாறு பல வசனங்களை கூறி
தேற்றி கொள்கிறேன் என் அடங்கா மனதை.
--ரவிஷ்னா

பின் குறிப்பு:
வழிகள் இருந்தால் கூறவும்.

No comments: