Saturday, March 5, 2011

முடியவில்லை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்னை மறந்து விடு என்று நகையாடி விட்டு  சென்றுவிட்டால்
என் இதய தேவதை...
அன்று முதல்
அவளை பார்க்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்
கண்கள் மறுக்கின்றன.....
அவள் மனம் நுகர வேண்டாம் என்று எண்ணுகிறேன்
என் சிறு மூக்கும் மறுக்கின்றன.....
அவள் பற்றி பேச வேண்டாம் என்று எண்ணுகிறேன்
என் இதழும் மறுக்கின்றன.....
அவளை நினைக்க வேண்டாம் என்று எண்ணுகிறேன்
மனமும் மறுக்கின்றன.....
அவள் கொடுத்த பரிசுகளையும் அவளின் புகைப்படங்களையும்
தீண்ட வேண்டாம் என்று எண்ணுகிறேன்
கரட்டு கைகளும் மறுக்கின்றன.....
இவை எதுவும் என்னால் இயலாததால்
மதுக்கடையை நோக்கி செல்கிறேன்....
ஆனால் கால்களும் பயணிக்க மறுக்கின்றன.....
என்னையே அழிக்க எண்ணி ஒரு முழம்
கயிற்றினை தேடி எடுத்து விட்டேன்.....
இதுவரையில் எனக்கு உதவாத மேல் சொன்ன என் உறுப்புகள்,
இப்பொழுது மட்டும் பேருதவி செய்கின்றது......
என்னதொரு விந்தை...!!!!!
அவளுக்கு பிடிக்காதது போல், என்னை என் உடலுக்கும்
புடிக்கவில்லையோ ???!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: