Monday, July 21, 2008

காலம் கனியட்டும்


நான் கவிதை என்று கூறும்
நான்கைந்து வரிகளை படிக்கும்
என் நண்பர்கள் என்னைப் பற்றி
கூறுவது நான் யாரையோ
காதலிக்கிறேன் என்று....
மூன்றாவது மனிதர்கள் அவர்களுக்கு
தெரிகின்ற ஒன்று உனக்கு புரியவில்லை
பெண்ணே நான் என் செய்வேன் ......
ஆனால் நீயோ படித்து விட்டு
நன்றாக இருக்கின்றது என்று இரு
வார்த்தைகளில் கூறிவிட்டு மறைகிறாய் ....
நீ புரிகின்ற காலம் என்று வருமோ ???
அது வரை நான் கண்டிப்பாக காத்திருப்பேன்....
காலம் கனியட்டும்...
உன் மனம் மாறட்டும்....
--ரவிஷ்னா

No comments: