நான் உன் மீது கொண்ட காதலை
அந்த காற்றிடம் கேட்டு பார்....
என் சுவாசம் நீ தான் என்பதை தெரிவிக்கும்....
நான் உன் மீது கொண்ட காதலை
அந்த மழையிடம் கேட்டு பார்...
நீ என்னை விட்டு பிரிகின்ற போது
என் மனம் படும் வேதனையை
தன் கண்ணீரால் தெரிவிக்கும்.....
நான் உன் மீது கொண்ட காதலை
அந்த நெருப்பிடம் கேட்டுப் பார் ...
நீ என்னை விட்டு விலகிச்
சென்ற நொடிகளில் நான் கொண்ட
கோபத்தை அனலாய்த் தெரிவிக்கும்.....
நான் உன் மீது கொண்ட காதலை
இந்த பூமியிடம் கேட்டுப் பார்...
தன்னை விட அவன் மனம்
பரப்பளவில் பெரியது என்பதையும்
அதில் உன் ஒருத்திக்கு மட்டுமே
இடம் உண்டு என்பதையும் தெரிவிக்கும்.....
நான் உன் மீது கொண்ட காதலை
சூரியனிடம் கேட்டுப் பார்....
நீ இல்லாத போது நான் பட்ட
வேதனையை வெப்பமாக தெரிவிக்கும்...
நான் உன் மீது கொண்ட காதலை
நிலவிடம் கேட்டுப் பார்.....
அதன் அழகில் குறை உண்டு என்பதை
பலமுறை சுட்டி காட்டியமையை தெரிவிக்கும்.....
எதுவும் வேண்டாம்.....
நான் உன் மீது கொண்ட காதலை
உன் இதயத்திடமே கேட்டுப் பார்...
உண்மையில் அது இதயமாக இருந்தால்
அந்த உண்மையை உரைக்கட்டும் .....
--ரவிஷ்னா
2 comments:
very much loved the lines ravishna,keep writing dude:)
தங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் நன்றி ....
மீண்டும் வாருங்கள்.
நட்புடன்,
ரவிஷ்னா
Post a Comment