Sunday, March 6, 2011

நிம்மதியாய் இரு நீ மட்டும்


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சூரியனும் உருகிவிடும் படியான ஒத்த
குளிரினை கொண்ட மார்கழி மாத
கார்விருளில் என்னறயினுள் ஏதோ ஒரு மூலையில்
உறங்கி கொண்டிருந்த என்னை எழுப்பி

என் தூக்கம் கலைத்து சென்றாய் உன் காதலை கூறி....

காக்கைகளும் ஏனைய பறவைகளும்
தன் இனத்துடன் மீண்டும் இணைகிற
அந்த மந்தமான ஒரு மாலை பொழுதினில்,

மீண்டும் என் தூக்கம் கலைத்து சென்றாய் உன் பிரிவை கூறி.....

இரண்டுகுமானதாய் ஒரு வேறுபாட்டினையும் கூறிகிறேன்
கேளடி என் காதலியே!!!

மேற் கூறிய இரு வேளைக்கு பிறகு
நிம்மதி கெட்டது என்னவோ எனக்கு மிகவும் அதிகம்....

என் சீண்டல்கள் இல்லமால் நிம்மதியாய்
இருப்பது என்னவோ உனக்கு பிடித்திருகிறது போலும்!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரவிஷ்ணா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

No comments: