Friday, July 18, 2008

தலைப்பு தெரியவில்லை


நான் உன் மேல் கொண்டது
நட்பா? காதலா?
தலைப்பு தெரியவில்லை...

நான் உன்னை எப்படி அழைக்க?
தோழியா? காதலியா ?
தலைப்பு தெரியவில்லை...

என் வேதனைக் காலங்களில்
நீ என்னோடு இருந்தாய்.
அந்தக் காலங்களில்
நான் கண்டேன் என் எதிர் காலத்தை...

அப்பொழுது தான் நான் உன் மேல்
அன்பு கொண்டேன்....
இன்னும் தெரியவில்லை
அதன் தலைப்பு...

குழப்பங்கள் எதற்கு நீயே சொல்லி விடு
என்று உன்னை நெருங்கிய நொடியில்
நீ கொடுத்த கடிதம் தெரிவித்தது
அது நட்பு தான் என்பதை...

மெல்லிய புன்னகையுடன்
இடம் பெயர்ந்தேன் வாழ்த்துக்களுடன் ....
தெரியாத தலைப்பு இப்பொழுது தெரிந்தது !!!
--ரவிஷ்னா

4 comments:

shilpa said...

ungal kavithaiyai
vanoliill
kettapotthu
vullam magilthen!!!!
-shilpa

Ravishna said...

Thanks a lot Shilpa.
Keep visiting my blog.

--Ravishna

Kesavan said...

arumaiyana kavithai ravishna..


rasithen...

Kesavan

Ravishna said...

நன்றி கேசவன் என் கவிதையை படித்தமைக்கு

மீண்டும் வாருங்கள்

நட்புடன்

ரவிஷ்னா