Thursday, July 24, 2008

பழைய நினைவுகள் இன்றும் புதியதாய்


நீயும் நானும் ஓடி விளையாடிய
கடற்கரை மணலும்,
சிறு சிறு கேலி கூத்துக்கு
நீ என் மீது கோபித்துக்
நான் உன்னிடம் வந்து செல்லமாக
பேசி உன்னை சமாதான படுத்துவதும் ,
பின்னர் நீ "ச்சி போடா" என்று
என் தோள் மீது சாய்ந்து கொள்வதும்,
அந்த இனிமையான தருணங்களை
இன்று நினைத்தாலும் நெஞ்சம் கணக்கிறது.
நீ இன்று எப்படி இருக்கிறாய்???
நான் இன்று உன்னை நினைக்கின்ற
நேரத்தில்,நீ என்ன செய்கிறாய்
என்று எனக்கு தெரியாது....
என்னை போல்
நினைத்து பார்க்க நேரம் இருக்கிறதா???
இருந்தால், என்னை பற்றி நினைத்து
பார்க்கிறாயா???
நம் காதல் நினைவுகளை பற்றி
நினைத்து பார்க்கிறாயா???
நாம் ஒன்றாய் இருந்த
தருணங்கள் உன்னையும் மன
உளைச்சலுக்கு ஆளாக்குகிறதா????
அப்படி செய்தால் நிச்சயம்
இன்னும் நம் காதல் நம்மோடு
வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது
என் தேவதையே!!!
பழைய நினைவுகள் இன்றும்
புதியதாய் வந்து விடுகின்றன தான்....
--ரவிஷ்னா

No comments: