
தனிமையின் தன்மை கொடுமையான இனிமை ...
அதனினும் கொடுமை என்பேன் ,
ஒரு மயில் நீ அவ்வப்போது
வந்து செல்வதும்,
நான் ஒருமையாய் இருக்கின்ற போது
உன் நினைவுகள் வந்து செல்வதும்.....
எதுவுமே தெரியாமையால்,
ஒன்றுமே புரியாமையால்,
எதையோ எழுதியமையால்,
இதனைக் கவிதை என்கிறேன்.
இவ்வாறு பலவற்றை எழுதியமையால்
என் பேனாவில் மை தீர்ந்தது.
ஹையோ! என்று பதரியமையை
அறிந்த என் மனது
உன் உடலில் ஓடும் குருதிதனை
ஊற்றி எழுது என்று ஆலோசனை
கூறியமையால் எனக்கும் என் மனதுக்கும்
சிறிய காலம் பேச்சு வார்த்தை இல்லை...
பாவம்!!! என் மனம்
எப்படி அறியும்???
நீ என் குருதியில் கலந்துல்லாய்
என்பதை
--ரவிஷ்னா
No comments:
Post a Comment